236. | இனியணி யென்னுங் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன. |
|
இஃது எய்தாத தெய்துவித்தது, இவ்வீற்று இடைச்சொற்கும் வினைச்சொற்கும் முடிபு கூறுதலின். |
இதன் பொருள் : இனி அணி என்னுங் காலையும் இடனும் - இனியென்றும் அணியென்றுஞ் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் உணரநின்ற இடைச்சொல்லும், வினையெஞ்சு கிளவியும் - இவ்வீற்று வினையெச்சமாகிய சொல்லும், சுட்டும் - இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும், அன்ன - முற்கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :இனிக்கொண்டான் அணிக்கொண்டான் தேடிக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், இக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். இவ்விடைச்சொன் மூன்றும் இப்பொழுது கொண்டான் அணிய இடத்தே கொண்டான் இவ்விடத்துக் கொற்றன் என உருபின் பொருள்பட வந்த வேற்றுமையாதலின் வேறோதி முடித்தார். |
(34) |
237. | இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாத றொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. |
|
இஃது இவ் வீற்று வினையெச்சத்துள் ஒன்றற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் - இன்றியென்று சொல்லப்படும் வினையெச்சக் குறிப்பின் இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாகத் திரிந்து முடிதல், தொன்றியல் மருங்கிற் செய்யுளுள் உரித்து - பழக நடந்த கூற்றையுடைய செய்யுளுள் உரித்து என்றவாறு. |
உதாரணம் :'உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே.' |