உயிர்மயங்கியல்219

242.

வளியென வரூஉம் பூதக் கிளவியு
மவ்விய னிலையல் செவ்வி தென்ப.

 

இதுவும் அது.
 

இதன் பொருள் :வளியென  வரூஉம்  பூதக் கிளவியும் - வளியென்று
சொல்ல   வருகின்ற   1இடக்கரல்லாத   ஐம்பெரும்  பூதங்களில் ஒன்றை 
உணரநின்ற  சொல்லும், அவ்வியல்நிலையல்  செவ்வி தென்ப - முன்னைக்
கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண்  நிற்றல் செவ்விதென்று
கூறுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் :வளியத்துக்கொண்டான்  வளியிற்கொண்டான்  சென்றான்
தந்தான் போயினான் என வரும்.
 

செவ்விதென்றதனான் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.
 

(40)
 

243.

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
 

இது  மரப்பெயரில்   ஒன்றற்கு   வல்லெழுத்துவிலக்கி  மெல்லெழுத்து
விதிக்கின்றது.
 

இதன் பொருள் :உதிமரக் கிளவி -  உதித்த லென்னுந்  தொழிலன்றி
உதியென்னும்   மரத்தினை  உணரநின்றசொல்,  மெல்லெழுத்து  மிகும்  -
வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : உதிங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமரத்தினை 2இதன்பின் வைத்தமையான்
உதியங்கோடு என  இதற்கும் அம்முப்பெறுதல் கொள்க. இஃது இக்காலத்து
ஒதியென மருவிற்று.
 

(41)
 

244.

புளிமரக் கிளவிக் கம்மே சாரியை.
 

இது வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.


1. இடக்கர் என்பது அபானவாயுவைக் குறித்தது.
 

2. இதன்பின் என்றது வருஞ் சூத்திரத்தை.