இதன் பொருள்:புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை - சுவையன்றிப் புளியென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லிற்கு அம்மென்னுஞ் சாரியை வரும் என்றவாறு. |
உதாரணம் :புளியங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
சாரியைப் பேற்றிடை முன்னர்ச் சூத்திரத்து 1எழுத்துப்பேறு கூறியவதனால் அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. |
(42) |
245. | ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. |
|
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் :ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும் - அம் மரப்பெயரன்றிச் சுவைப்புளி உணர நின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : புளிங்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். பாளிதம் பாற்சோறு. இவற்றிக்கு இரண்டாமுருபு விரிக்க. |
(43) |
246. | வல்லெழுத்து மிகினு மான மில்லை யொல்வழி யறிதல் வழக்கத் தான. |
|
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : வல்லெழுத்து மிகினும் மானமில்லை - சுவைப்புளி மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்குமுடியினுங் குற்றமில்லை, ஒல்வழியறிதல் வழக்கத்து ஆன - பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து என்றவாறு. |
உதாரணம்:புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். |
ஒல்வழி என்றதனாற் புளிச்சாறுபோல ஏனைய வழக்குப் பயிற்சி இலவென்று கொள்க. |
|
1. எழுத்துப்பேறு என்றது, மெல்லெழுத்துப் பெறுமென முன்னர்ச் சூத்திரத்து விதித்ததை. |