222உயிர்மயங்கியல்

தொழிற்   சொற்கு,   ஆன்   இடைவருதல்  ஐயமின்று  -  ஆன்சாரியை
இடைவந்து முடிதல் ஐயமின்று என்றவாறு.
 

உதாரணம் :   பரணியாற்   கொண்டான்   சோதியாற்   கொண்டான்
சென்றான் தந்தான்  போயினான் என  வரும். ஐயமின்றென்தனால் இயைபு
வல்லெழுத்து வீழ்க்க. இதற்குக் கண்ணென் உருபு விரிக்க.
 

(45)
 

248.

திங்கண் முன்வரி னிக்கே சாரியை.
 

இஃது  இயைபு வல்லெழுத்தினோடு  இக்கு வகுத்தலின் எய்தியதன்மேற்
சிறப்புவிதி வகுத்தது.
 

இதன் பொருள் :1திங்கள்  முன்வரின்  இக்கே  சாரியை - திங்களை
உணரநின்ற   இகர  ஈற்றுப்   பெயர்களின்   முன்னர்த்   தொழினிலைக்
கிளவிவரின் வருஞ்சாரியை இக்குச் சாரியையாம் என்றவாறு.
 

உதாரணம் :ஆடிக்குக்கொண்டான்  சென்றான்  தந்தான் போயினான்
என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்குங் கண்ணென் உருபு
விரிக்க.
 

(46)
 

249.

ஈகார விறுதி யாகார வியற்றே.
 

இஃது ஈகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :ஈகார  இறுதி ஆகார இயற்று - ஈகார ஈற்றுப்பெயர்
அல்வழிக்கண்  ஆகார  ஈற்று  அல்வழியின்  இயல்பிற்றாய் வல்லெழுத்து
வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் :ஈக்கடிது தீக்கடிது சிறிது தீது பெரிது என வரும்.
 

(47)
 

250.

நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரு
மீயென மரீஇய விடம்வரை கிளவியு
மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

1. திங்கள் என்றது மாதத்தை.