உயிர்மயங்கியல்231

எடுத்தோதி    முடிப்பாராதலின்    அம்முடிபு    பெறாமையின்  1ஈற்றுப்
பொதுவிதியான் முடியாது இலேசான் முடித்தாம்.
 

(63)
 

266.

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.
 

இஃது ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
  

இதன் பொருள் : வேற்றுமைக்கண்ணும் அதனோ  ரற்று - ஊகார ஈறு
வேற்றுமைப்  பொருட் புணர்ச்சிக்கண்ணும்  ஆகார ஈற்று   அல்வழிபோல
வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு.
 

உதாரணம் தழூஉக்கடுமை      சிறுமை      தீமை     பெருமை,
கொண்மூக்குழாம் செலவு தோற்றம் மறைவு என வரும்.
 

(64)
 

267.

குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கு
நிற்றல் வேண்டு முகரக் கிளவி.

 

இஃது இயைபு வல்லெழுத்தினோடு உகரம்  வகுத்தலின் எய்தியதன்மேற்
சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள்: குற்றெழுத்து இம்பரும்  -  குற்றெழுத்தின்பின் வந்த
ஊகார   ஈற்று   மொழிக்கும்,   ஓரெழுத்து   மொழிக்கும்  -   ஓரெழுத்
தொருமொழியாகிய  ஊகார  ஈற்று  மொழிக்கும்,  உகரக்  கிளவி  நிற்றல்
வேண்டும்  -  உகரமாகிய  எழுத்து   நிற்றலை   விரும்பும்   ஆசிரியன்
என்றவாறு.
 

உதாரணம் : உடூஉக்குறை செய்கை தலை புறம்  எனவும், தூஉக்குறை
செய்கை தலை புறம் எனவும் வரும்.
 

நிற்றல்  என்றதனான்   உயர்திணைப்   பெயர்க்கும்   வல்லெழுத்தும்
உகரமுங் கொடுக்க. ஆடூஉக்கை மகடூஉக்கை செவி தலைபுறம்  என வரும்.
இவை     தொகை    மரபினுள்   2இயல்பாதல்   எய்தியவற்றை  ஈண்டு
இருவழிக்கண்ணும் முடித்தார், ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு.
 

(65)

1. ஈற்றுப்  பொதுவிதி   என்றது,  'ஊகார   விறுதி   யாகாரவியற்றே'
என்றதை.
 

2. இயல்பாத லெய்திய தென்றது -  தொகைமரபினுள் 11-ம் சூத்திரத்துச்
சொல்லிய விதியால் இயல்பானமையை.