இதன் பொருள் :செய்யுண் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி - செய்யுளிடத்து வேட்கையென்னும் ஐகார ஈற்றுச்சொல், அவா முன் வரின் - அவாவென்னுஞ் சொற்கு முன்னர் வரின், மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் - அவ் வைகாரந் தான்ஊர்ந்த மெய்யோடுங் கூடக் கெடுமென்று கூறுவர் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற டகார ஒற்று ணகார ஒற்றாய்த் திரிதல் வேண்டும் என்றவாறு. |
உதாரணம் :'வேணவாநலிய வெய்யவுயிரா' என வரும். |
வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப் பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை. எனவே, வேட்கையாலுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரிந்தது. இதனை வேட்கையும் அவாவுமென அல்வழியென்பாரும் உளர். இங்ஙனங் கூறுவார் 1பாறங்கல் என்பதனை அம்முக்கொடுத்து ஈண்டுமுடிப்பர். |
(86) |
289. | ஓகார விறுதி யேகார வியற்றே. |
|
இஃது ஓகார ஈற்று அல்வழிமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் :ஓகார இறுதி ஏகார இயற்று - ஓகார ஈற்றுப் பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்த வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஓக்கடிது சேரக்கடிது சிறிது தீது பெரிது என வரும். |
(87) |
290. | மாறுகொ ளெச்சமும் வினாவு மையமுங் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். |
|
இஃது இடைச்சொன் முடிபு கூறலின் எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் :மாறுகொள் எச்சமும் - மாறுபாட்டினைக்கொண்ட எச்சப்பொருண்மையை ஒழிபாகவுடைய |
|
1. பாறாங்கல் என 82-ஞ் சூத்திரத்து இலேசினான் முடித்த அல்வழி முடிபை, இதனோடு அம்சாரியை கொடுத்து பாறங்கல் என முடிப்பாருமுளர் என்பது கருத்து. |