301. | ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. |
|
இஃது அதற்கு எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் :ஆவயின் - அவ் வெரிந் என்னுஞ் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்ற இடத்து, வல்லெழுத்து மிகுதலும் உரித்து - மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து என்றவாறு. |
உதாரணம் :வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும். |
(6) |
302. | ணகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. |
|
இது நிறுத்தமுறையானே ணகார ஈறு வேற்றுமைப் பொருட்கட் புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :ணகார இறுதி - ணகார ஈற்றுப்பெயர், வல்லெழுத்து இயையின் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், டகாரமாகம் வேற்றுமைப் பொருட்கு - டகாரமாகத் திரிந்து முடியும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் என்றவாறு. |
உதாரணம் :மட்குடம் சாடி தூதை பானை என வரும். மண்கை புண்கை என்பன 1இரண்டாவதன் திரிபின் முடிந்தன. |
கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும். |
(7) |
303. | ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை. |
|
இஃது இவ் வீற்று விரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : ஆணும் பெண்ணும் - ஆணென்னும் விரவுப்பெயரும் பெண்ணென்னும் விரவுப்பெயரும், அஃறிணை இயற்கை - தொகைமரபினுள் 'மொழிமுத லாகும்' |
|
1. இரண்டாவதன்றிரிபு என்றது, தொகைமரபு 15 - ம் சூத்திரத்தாற் கூறிய இரண்டாம் வேற்றுமைத் திரிபை. |