புள்ளிமயங்கியல்251

(எழு 147)  என்பதன்கண்  அஃறிணைப்பெயர்   முடிந்த   இயல்புபோலத்
தாமும் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் :ஆண்கை பெண்கை செவி தலை புறம் எனவரும்.
 

இது   தொகைமரபினுள் 'அஃறிணை   விரவுப்பெயர்'   (எழு  -  155)
என்பதனுள்    முடிந்த     இயல்பன்றோவெனின்,    இவை     ஆண்டு
முடிந்தனபோலத்  தத்தம்  மரபின்  வினையாற்  பாலறியப்படுவன  அன்றி
1இருதிணைக்கண்ணும்  அஃறிணையாய்  முடிதலின், அஃறிணைப்  பெயரது
இயல்போடு மாட்டெறிந்து முடித்தாரென்க. ஆண்கடிது பெண்கடிது என்னும்
அல்வழிமுடிபு 'மொழிமுத  லாகும்' (எழு - 147) என்பதன் கண் வருமொழி
முற்கூறியவதனான் முடிக்க.
 

(8)
 

304.

ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே.
 

இது   திரிபுவிலக்கிச்     சாரியை    வகுத்தலின்  எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் :ஆண்மரக்  கிளவி  -  ஆண்பாலை  உணர்த்தாது
ஆணென்னும் மரத்தினை உணரநின்ற சொல், அரை மர  இயற்று - அரை
யென்னும் மரம்  அம்முப்பெற்ற  இயல்  பிற்றாய்த் தானும் அம்முப்பெற்று
முடியும் என்றவாறு.
 

உதாரணம் :ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

ஒன்றென முடித்தலான் இயல்புகணத்துங் கொள்க. ஆணநார் இலை என
வரும்.
 

2விரவுப்பெய ரன்றென்றற்கு மரமென்றார்.
 

(9)
 

305

விண்ணென வரூஉங் காயப் பெயர்வயி
னுண்மையு முரித்தே யத்தென் சாரியை
செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை.

  

இது செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது.


1. இருதிணைக்கண்ணும்  அஃறிணையாய்   முடிதல்   என்றது,  ஆண்
வந்தான் ஆண்  வந்தது  என  முடியாமல்  இருதிணைக்கண்ணும்  ஆண்
வந்தது என முடிதலை.
 

2. விரவுப்பெயரென்றது, ஆண் என்னும் பொதுப்பெயரை.