எல்லாமென்றதனால் தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இன்சாரியை பெற்றும் புணர்வன கொள்க. வெண்ணுக்கரை 'தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து' எண்ணுப்பாறு வெண்ணின்கரை என வரும். |
(11) |
307. | கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே. |
|
இஃது இவற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் :கிளைப்பெய ரெல்லாம் - ணகார ஈற்றுள் ஓரினத்தை உணரநின்ற பெயரெல்லாம், கொளத்திரிபு இல - திரிபுடையவென்று கருதும்படியாகத் திரிதலின்றாய் இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : உமண் என நிறுத்திக் குடி சேரி தோட்டம் பாடி எனத் தந்து முடிக்க. |
இனி , எல்லாமென்றதனாற் பிற சாரியைபெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவுங் கொள்க. 1மண்ணப்பத்தம் எண்ண நொலை எனவும், கவண்கால் பரண்கால் எனவும் கொள்க. |
கொள என்றதனால் ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணரநின்ற இடைச்சொற்கள் திரிந்து முடிவனவுங் கொள்க. அங்கட்கொண்டான் இங்கட்கொண்டான் உங்கட்கொண்டான் எங்கட்கொண்டான் எனவும், ஆங்கட்கொண்டான் ஈங்கட் கொண்டான் ஊங்கட்கொண்டான் யாங்கட்கொண்டான் எனவும், அவட்கொண்டான் இவட்கொண்டான் உவட்கொண்டான் எவட்கொண்டான் எனவும் ஒட்டுக. |
(12) |
|
1. மண்ணப்பத்தம் - மண்ணாலாகியபத்தம். பந்தம் பத்தம் என்றாயிற்று. பந்தம் - திரள். எண்ணாலாகியநொலை. நொலை - அப்பவகை. மண்ணப்பத்தம், எண்ணநொலை இவை அக்குப்பெற்றன. |