தன்னின முடித்த லென்பதனால் அம்மு தம்மு நம்மு எனச் சாரியைக்கண்ணும் உகரம் வருதல் கொள்க. |
(33) |
329. | வேற்றமை யாயி னேனை யிரண்டுந் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை. |
|
இது மேல் முடிபுகூறிய மூன்றனுள் இரண்டற்கு வேற்றுமைக்கண் வேறோர் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமை யாயின் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை - இறுதியில் உருமொழிந்த இரண்டும் அக்கென்னுஞ் சாரியை தோன்றி முடிதலை வேண்டும் ஆசிரியன் என்றவாறு. |
உதாரணம் : ஈமக்குடம் கம்மக்குடம் சாடி தூதை பானை எனவும், ஞாற்சி நெருப்பு மாட்சி விறகு எனவும் ஒட்டுக. |
அக்கு வகுப்பவே நிலைமொழித் தொழிலாகிய உகரங்கெட்டு 1முற்கூறிய வல்லெழுத்து விலக்கப்படாமையின் நின்று முடிந்தது. |
வன்கணத்திற்கு முன்னின்ற சூத்திரத்திற் கூறியது 2குணவேற்றுமைக்கென்றும் ஈண்டுக் கூறியது பொருட் புணர்ச்சிக்கென்றுங் கொள்க. |
(34) |
330. | வகார மிசையு மகாரங் குறுகும். |
|
இது முன்னர் 'அரையளவு குறுகல்' (எழு - 13) எனவும், 'னகாரை முன்னர்' (எழு - 52) எனவுங் கூறிய மகரம் இருமொழிக்கண்ணுங் குறுகுமென அதன் ஈற்றகத்து எய்தாத தெய்துவிக்கின்றது. |
இதன் பொருள் : வகார மிசையும் மகாரங் குறுகும் - மகாரம் ஒருமொழிக்கண்ணேயன்றி வகாரத்தின்மேலுங் குறுகும் என்றவாறு. |
உதாரணம் : நிலம்வலிது வரும்வண்ணக்கண் என வரும். |
(35) |
|
1. முற்கூறிய வல்லெழுத்தென்றது, 32 - ம் சூத்திரத்தாற் பெற்ற வல்லெழுத்தை. |
2. குணவேற்றுமை என்றது - கடுமை முதலிய குணச் சொற்கள் வந்து புணரும் வேற்றுமைப் புணர்ச்சியை. |