272 புள்ளிமயங்கியல்

331.

நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
வத்து மான்மிசை வரைநிலை யின்றே
யொற்றுமெய் கெடுத லென்மனார் புலவர்.
 

இஃது இவ் வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : நாட்பெயர்க்  கிளவி  மேற்கிளந்   தன்ன -  மகர
ஈற்று  நாட்பெயர்  இகர  ஈற்று  நாட்பெயர்போல  ஆன்  சாரியைபெற்று
முடியும்,  அத்தும்  ஆன்மிசை  வரைநிலை  இன்று  -   அத்துச்சாரியை
ஆன்சாரியைமேலும்  பிறசாரியைமேலும்  வருதல்  நீக்கு  நிலைமையின்று,
ஒற்றுமெய்  கெடுதல் என்மனார்  புலவர்  -  ஆண்டு  நிலைமொழி  மகர
ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

உம்மையை ஆன்மிசையுமென மாறுக.
 

உதாரணம் : மகத்தாற் கொண்டான் ஓணத்தாற் கொண்டான் சென்றான்
தந்தான்  போயினான் என்க. ஏனை  நாட்களோடும்  ஒட்டுக. மகர ஒற்றுக்
கெடுத்து  'அத்தி  னகர  மகரமுனை யில்லை' (எழு - 125)  என  அகரங்
கெடுத்துக் 'குற்றிய லுகரமு  மற்றென' (எழு - 105)  என ஆனேற்றி 'ஆனி
னகரமும்'  (எழு - 124) என்றதனான்  றகரமாக்கி  முடிக்க.  மகத்துஞான்று
கொண்டான்  சென்றான்  தந்தான்  போயினான்   என   ஞான்றென்னுஞ்
சாரியைமேல் அத்து வந்தது.
 

வரையாது    கூறினமையின்   இம்முடிபு   நான்குகணத்துங்  கொள்க.
மகத்தான்  ஞாற்றினான்  நிறுத்தினான்  மாய்ந்தான் வந்தான் அடைந்தான்
என வரும்.
 

(36)
 

332.
 

னகார விறுதி வல்லெழுத் தியையின்
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

 

இது  நிறுத்தமுறையானே  னகர  இறுதி  வேற்றுமைக்கட்  புணருமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : னகார இறுதி வல்லெழுத்து  இயையின் றகாரமாகும்
- னகார ஈற்றுப்பெயர் வல்லெழுத்து  முதன்  மொழி வருமொழியாய் வந்து
இயையின் றகரமாகும், வேற்