றுமைப் பொருட்டு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. |
உதாரணம் : பொற்குடம் சாடி தூதை பானை எனவரும். |
(37) |
333. | மன்னுஞ் சின்னு மானு மீனும் பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியு மன்ன வியல வென்மனார் புலவர். |
|
இஃது அவ்வீற்று அசைநிலை இடைச்சொற்களும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் - மன்னென்னுஞ் சொல்லுஞ் சின்னென்னுஞ் சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் ஈனென்னஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் முன்னென்னுஞ் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - முற்கூறிய இயல்பினை யுடையவாய் னகரம் றகரமாய் முடியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : 'அதுமற் கொண்கன் றேரே' 'காப்பும் பூண்டிசிற்கடையும் போகல்' (அகம்-7) எனவும் ஆற்கொண்டான் ஈற்கொண்டான் பிற்கொண்டான் முற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், வரிற்கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும். |
பெயராந்தன்மையாகிய 1ஆன் ஈன் என்பனவற்றை முற்கூறாததனான் ஆன்கொண்டான் ஈன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க. |
பின் முன் என்பன பெயரும் உருபும் வினையெச்சமுமாய் நிற்றலிற் பெயர் ஈண்டுக் கூறினார். ஏனைய உருபியலுள்ளும் வினையெஞ்சு கிளவி யென்பதன்கண்ணும் முடியும். 2அப்பெயரை முற்கூறாததனாற் பின்கொண்டான் முன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க. |
இயலவென்றதனான் ஊனென்னுஞ் சுட்டு ஊன் கொண்டானென இயல்பாய் முடிதல் கொள்க. |
(38) |
|
1. ஆன் - அவ்விடம். ஈன் - இவ்விடம். ஊன் - உவ்விடம். |
2. அப் பெயரை என்றது, பின் முன் என்பவற்றை. |