282 புள்ளிமயங்கியல்

இதன் பொருள் : ஆதனும்   பூதனும்   -  முற்கூறிய  இயற்பெயருள்
ஆதனும்    பூதனும்    என்னும்    இயற்பெயர்கள்     தந்தையென்னும்
முறைப்பெயரோடு   முடியுங்கால்,   கூறிய   இயல்பொடு   -   முற்கூறிய
நிலைமொழி   அன்  கெடுதலும் வருமொழித் தகரவொற்றுக் கெடுதலுமாகிய
செய்கைகளுடனே,     பெயரொற்று      அகரந்     துவரக்கெடும்    -
நிலைமொழிப்பெயரில்   அன்கெட   நின்ற  தகரவொற்றும் வருமொழியில்
தகரவொற்றுக் கெட நின்ற அகரமும் முற்றக்கெட்டு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஆந்தை பூந்தை என வரும்.
 

இயல்பென்றதனாற்  பெயரொற்றும்   அகரமும்   கெடாதே   நிற்றலுங்
கொள்க. ஆதந்தை பூதந்தை என வரும்.
 

இனித் துவரவென்றதனால் அழான்  புழான் என நிறுத்தித் தந்தை என
வருவித்து நிலைமொழி னகரமும் வருமொழித் தகரமும் அகரமும் கெடுத்து
அழாந்தை புழாந்தை என முடிக்க.
 

(53)
 

349.

சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்.
 

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : சிறப்பொடு  வருவழி -  அவ்  வியற்பெயர்  பண்பு
அடுத்து  வரும்வழி,  இயற்கையாகும் - முற்கூறிய இரு வகைச் செய்கையுந்
தவிர்ந்து இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : பெருஞ்சாத்தன்றந்தை பெருங்கொற்றன்றந்தை என வரும்.
கொற்றங்கொற்றன்றந்தை   சாத்தங்கொற்றன்றந்தை  என்றாற்   போல்வன
பண்பன்றி அடை அடுத்தனவாதலிற் புறனடையான் முடிக்க. 
 

(54)
 

350.

அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியு
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை
மக்கண் முறைதொகூஉ மருங்கி னான.

 

இது மேலதற்கு வேறோர் வருமொழிக்கண் எய்தாத தெய்துவித்தது.