புள்ளிமயங்கியல்289

ஈற்று  இயல்பிற்றாய்  வல்லெழுத்து  வந்துழி  அவ்  வல்லெழுத்து  மிக்கு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : தேர்க்கால் செலவு தலை புறம் என வரும்.
 

இம்   மாட்டேற்றினை  யகர  ஈற்று   வேற்றுமை   அல்வழியென்னும்
இரண்டையுங்  கருதி  மாட்டெறிந்தாரென்பார்  அல்வழி முடிபும்  ஈண்டுக்
காட்டுவர். யாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும்.
 

இது ழகர ஈற்றிற்கும் ஒக்கும்.
 

மாட்டேற்றான்  உறழ்ச்சியுங்  கொள்க.  வேர்ங்குறை  வேர்க்குறை என
வரும். 
 

(67)
 

363.

ஆரும் வெதிருஞ் சாரும் பீரு
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்.

  

இஃது இவ் வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
 

இதன் பொருள் : ஆரும்  வெதிருஞ்  சாரும்  பீரும் - ஆரென்னுஞ்
சொல்லும் வெதிரென்னுஞ்  சொல்லுஞ் சாரென்னுஞ் சொல்லும் பீரென்னுஞ்
சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து
மிக்கு முடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும் என்றவாறு.
 

உதாரணம் : ஆர்ங்கோடு   வெதிர்ங்கோடு  சார்ங்கோடு  பீர்ங்கொடி
செதிள் தோல் பூ என வரும்.
 

1பீர் மரமென்பார்   பீர்ங்கோடென்பர்.  'பீர்வாய்ப்  பிரிந்த   நீர்நிறை
முறைசெய்து'  என்றாற்போலச்  சான்றோர்  பலருஞ் செய்யுள் செய்தவாறு
காண்க.
 

மெய்பெற  என்றதனான்  'ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர்' (அகம் -
93) என ஆர் அம்முப்பெறுதலும் 'மாரிப் 


1. பீர், கொடியென்பது இவர் கருத்துப்போலும். மரமென்பாருமுளர்
என்றமையின். குதிர் முதலியன மரம்.