298 புள்ளிமயங்கியல்

மழையென்பதனை        'வளியென   வரூஉம்'      (எழு - 242)   என்பதனுடனும் வளியென்பதனைப்  'பனியென   வரூஉம்'  (எழு - 241)   என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க.
 

உதாரணம் : வெயிலத்துக்   கொண்டான்    வெயிலிற்   கொண்டான்
சென்றான் தந்தான் போயினான்  என வரும். இஃது அத்துமிசை யொற்றுக்
கெடாதுநின்ற இடம். இஃது 'அவற்று முன்  வரூஉம் வல்லெழுத்து' (எழு -
133)  மிக்கது.  அதிகார வல்லெழுத்தின்மையின் இயல்புகணத்துங் கொள்க.
1சாரியை வருமொழி வரையாது கூறினமையின்.
 

378.

சுட்டுமுத லாகிய வகர விறுதி
முற்படக் கிளந்த வுருபிய னிலையும்.

 

இது முறையானே வகர ஈறு வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : சுட்டுமுதலாகிய வகர இறுதி - வகர  ஈற்றுப் பெயர்
நான்கனுட் சுட்டெழுத்தினை  முதலாகவுடைய வகர ஈற்றுப்பெயர் மூன்றும்,
முற்படக் கிளந்த உருபியல் நிலையும் - முற்படக்கூறிய உருபு புணர்ச்சியின்
இயல்பிற்றாய் வற்றுப்பெற்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் : அவற்றுக்கோடு   இவற்றுக்கோடு  உவற்றுக்கோடு  செவி
தலை புறம் என வரும்.
 

முற்படக்கிளந்த என்றதனானே வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க.
அவற்றின்கோடு  இவற்றின்கோடு  உவற்றின்கோடு  செவி தலை புறம் என
ஒட்டுக. இதனை ஏனைக் கணத்தோடு ஒட்டுக. 
 

(83)
 

379.

வேற்றுமை யல்வழி யாய்த மாகும்.
 

இது மேலனவற்றிக்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : வேற்றுமையல்வழி  ஆய்தமாகும் -  அச்சுட்டுமுதல்
வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமையல்லாத இடத்து  ஆய்தமாய்த் திரிந்து
முடியும் என்றவாறு. 


1. சாரியை இயல்புகணத்துக்கொள்க என மாற்றுக.