30நூன்மரபு

இதன் பொருள்:   எழுத்தெனப்படுப  -  எழுத்தென்று   சிறப்பித்துச்
சொல்லப்படுவன,  அகரமுதல் னகரவிறுவாய்  முப்பஃதென்ப - அகரமுதல்
னகரம்ஈறாகக்கிடந்த   முப்பதென்று  சொல்லுவர்  ஆசிரியர், சார்ந்துவரல்
மரபின் மூன்றலங்கடையே -சார்ந்துவருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய
மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு.
 

எனவே, அம்மூன்றுங்  கூடியவழி முப்பத்துமூன்றென்ப. அ-ஆ-இ-ஈ-உ
-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள-க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம் -ய்-ர்-ல்-வ்-ழ் -ள்-ற்-ன்
எனவரும்.  எனப்படுவ  வென்று சிறப்பித்துணர்த்துதலான்  அளபெடையும்
உயிர்மெய்யும்  இத்துணைச்  சிறப்பில;  ஓசையுணர்வார்க்குக்  கருவியாகிய
வரிவடிவுஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும்.
 

அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே
கூறுகின்றாரென்பது உணர்தற்கு னகரவிறுவா யென்றார்.
 

படுப,  படுவ. படுபவென்பது  படுத்தலோசையால்  தொழிற்  பெயராகக்
கூறப்படும்.    பகரமும்    வகரமும்    ஈண்டு    நிற்றற்குத்    தம்முள்
ஒத்தஉரிமையவேனும்,     எழுத்தெனப்படுவவெனத்     தூக்கற்றுநிற்குஞ்
சொற்சீரடிக்குப்  படுபவென்பது   இன்னோ  சைத்தாய்நிற்றலின்  ஈண்டுப்
படுபவென்றே பாடம் ஓதுக. இஃது அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல்.
 

அகர னகரமெனவே பெயருங் கூறினார்.
 

எழுத்துக்கட்கெல்லாம்  அகரம் முதலாதற்குக் காரணம் 'மெய்யி னியக்க
மகரமொடு சிவணும்'  (எழு - 46) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய
ஆண்மகனை   உணர்த்துஞ்   சிறப்பான்   னகரம்  பின்வைத்தார்.  இனி
எழுத்துக்கட்குங் கிடக்கை முறையாயினவாறு கூறுதும்.
 

குற்றெழுத்துக்களை   முன்னாகக்   கூறி   அவற்றிற்கு   இனமொத்த
நெட்டெழுத்துக்களை   அவற்றின்   பின்னாகக்   கூறினார், ஒருமாத்திரை
கூறியே    இரண்டுமாத்திரை   கூறவேண்டுதலின்.   அன்றி    இரண்டை
முற்கூறினாலோவெனின்,   ஆகாது;  ஒன்று  நின்று அதனோடு பின்னரும்
ஒன்று கூடியே இரண்டாவதன்றி