306 புள்ளிமயங்கியல்

397.

மெல்லெழுத் தியையின் ணகார மாகும்.
 

இது மேலதற்கு மென்கணத்துமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : மெல்லெழுத்து  இயையின்  ணகாரமாகும் -  ளகார
ஈறு  மெல்லெழுத்து  முதன்மொழி   வருமொழியாய்   வந்து   இயையின்
ணகாரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு.
 

உதாரணம் : முண்ஞெரி நுனி மரம் என வரும்.
 

இதனை  வேற்றுமையிறுதிக்கண்  அல்வழியது   எடுத்துந்  கோடற்கட்
சிங்கநோக்காக   வைத்தலின்   அல்வழிக்கும்    இம்   முடிபு   கொள்க.
முண்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். 
 

(102)
 

398.

அல்வழி யெல்லா முறழென மொழிப.
 

இது மேலதற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : அல்வழியெல்லாம்      -       ளகார      ஈறு
அல்வழிக்கணெல்லாம்,  உறழென  மொழிப   -  திரியாதும்  டகாரமாய்த்
திரிந்தும் உறழ்ந்துமுடியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : முள்கடிது முட்கடிது சிறிது தீது பெரிது என வரும்.
 

எல்லாமென்றதனாற்  குணவேற்றுமைக்கண்ணும்  இவ்வுறழ்ச்சி  கொள்க.
முள்குறுமை  முட்குறுமை  சிறுமை தீமை பெருமை எனவும், கோள்கடுமை
கோட்கடுமை வாள்கடுமை வாட்கடுமை எனவும் ஒட்டுக.
 

இதனானே        அதோட்கொண்டான்         இதோட்கொண்டான்
உதோட்கொண்டான்    எதோட்கொண்டான்     சென்றான்     தந்தான்
போயினானென உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவுங் கொள்க.
 

(103)
 

399.

ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான.

 

இது  மேலதற்கு  எய்தியது  விலக்கிப்   பிறிதுவிதி  வகுத்தது,  தகரம்
வருவழி உறழ்ச்சியேயன்றி ஆய்தமாகத் திரிந்து உறழ்க என்றலின்.