1இதனை ஏழென்று கொள்வார்க்குப் பிண்ணாக்கு சுண்ணாம்பு ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க. |
(1) |
407. | அவற்றுள் ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. |
|
இஃது அவ்வாறனுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : அவற்றுள் - அவ்வாறனுள், ஈரொற்றுத் தொடர்மொழி - இரண்டொற்று இடைக்கண் தொடர்ந்து நிற்குஞ் சொல்லிற்கு இடையின ஒற்று முதல் நின்றால், இடைத்தொட ராகா - மேல்இடையினந் தொடர்ந்துநில்லா, வல்லினமும் மெல்லினமும் தொடர்ந்து நிற்கும் என்றவாறு. |
உதாரணம் : ஆர்க்கு, ஈர்க்கு, நொய்ம்பு, மொய்ம்பு என வரும். |
(2) |
408. | அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு மெல்லா விறுதியு முகர நிலையும்.2 |
|
1. இதனை ஏழென்று கொள்வது அசைபற்றி. அசைகளாவன நேரசை நான்கும் நிரையசை நான்கும். அவையாவன :- |
1. அது - குறில் தனியேவந்த நேரசை. 2. கொக்கு - குறில் ஒற்றோடு வந்த நேரசை. 3. காடு - நெடில் தனியே வந்த நேரசை. 4. பாட்டு - நெடில் ஒற்றோடு வந்த நேரசை. 5. மரபு - குறிலிணை தனியே வந்த நிரையசை. 6. வரம்பு குறிலிணை ஒற்றோடு வந்த நிரையசை. 7. பலாசு - குறில் நெடில் இணைந்த நிரையசை. 8. கராம்பு - குறில் நெடில் ஒற்றோடு வந்த நிரையசை என்பனவாம். இவற்றுள் குற்றெழுத்துக்குப் பின்வந்த உகரம் முற்றிய லுகரமாகலின் அதனை நீக்கி ஏனைய ஏழசைப்பின்னும் வந்தன குற்றிய லுகரமாதல் காண்க. இதனை 'நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை - ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்-றேழ்குற் றுகரக் கிடனென மொழிப' என்னுஞ் சூத்திரத்தானறிக. |
இங்ஙனம் ஏழசைபற்றிக் குற்றியலுகரங் கொள்வார்க்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு முதலியனவும் வருவது போவது முதலியனவும் ஏழசையுளடங்காவாதலின் அசைகொள்ளப்படாவென மறுப்பர் நன்னூல் விருத்தியுரைகாரரும். [நன்னூல் - சூ. 94.] |
2. நிறையும் எனவும் பாடம். |