பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற் றிகழ்ந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக் கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக் கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்.' |
|
இதனான் அறிக. |
இனிக் கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோருமென இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர். |
அவர்தாம், |
'தன்மக னாசான் மகனே மன்மகன் பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே யுரைகோ ளாளனோ டிவரென மொழிப.' |
|
இவர் தன்மை, |
1'அன்னங் கிளியே நன்னிற நெய்யரி யானை யானே றென்றிவை போலக் கூறிக் கொள்ப குணமாண் டோரே.' |
|
இதனான் அறிக. |
இனிக் கற்பிக்கப்படாதோர் எண்வகையர். |
'மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வ னடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன் றடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர் நெடுநூலைக் கற்கலா தார்.' |
|
என இவர். |
|
1. 'பாலுநீரும் பாற்படப் பிரித்த - லன்னத் தியல்பென வறிந்தனர் கொளலே.' |
'கிளந்தவா கிளத்தல் கிளியின தியல்பே.' |
'எந்நிறந் தோய்தற்கு மேற்ப தாத - னன்னிறத் தியல்பென நாடினர் கொளலே.' |
'நல்லவை யகத்திட்டு நவைபுறத் திடுவது - நெய்யரி மாண்பென நினைதல் வேண்டும்.' |
'குழுவுபடூஉப் புறந்தருதல் குஞ்சரத் தியல்பே.' |
'பிறந்த வொலியின் பெற்றியோர்ந் துணர்தல் - சிறந்த வானேற்றின் செய்தி யென்ப.' |