அவ்வரைமாத்திரையுந் தனித்துக் கூறிக் காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேற் பெய்து காக்கை கோங்கு கவ்வையெனக் காட்டுப. 1மெய்யென்பது அஃறிணை யியற் பெயராதலின் மெய்யென்னும் ஒற்றுமைபற்றி அரையென்றார். |
(11) |
12. | அவ்விய னிலையு மேனை மூன்றே. |
|
இது சார்பிற் றோற்றத்து மூன்றற்கும் அளவு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஏனை மூன்று - சார்பிற் றோற்றத்து மூன்றும், அவ்வியல் நிலையும் -முற்கூறிய அரை மாத்திரையாகிய இயல்பின்கண்ணே நிற்கும் என்றவாறு. |
கேண்மியா, நாகு, எஃகு என வரும். |
(12) |
13. | அரையளவு குறுகன் மகர முடைத்தே யிசையிட னருகுந் தெரியுங் காலை. |
|
இது மெய்களுள் ஒன்றற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று. |
இதன் பொருள் :இசை இடன் மகரம் அரையளவு குறுகலுடைத்து - வேறோர் எழுத்தினது ஓசையின்கண் மகரவொற்றுத் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை பெறுதலையுடைத்து, தெரியுங்காலை அருகும் - ஆராயுங் காலத்துத் தான் சிறுபான்மையாய் வரும் என்றவாறு. |
உதாரணம் : போன்ம் வரும்வண்ணக்கன் என ஒரு மொழிக்கண்ணும் இருமொழிக்கண்ணுங் கொள்க. 2இது பிறன்கோட் கூறலென்னும் உத்தி. |
(13) |
|
1. மெய்கள் எனக் கூறவேண்டியதை மெய்யென ஒருமையாகக் கூறினமையின் அதற்கியைய அரையென ஒருமையாற் கூறினாரென்பார் மெய்யென்னும் ஒற்றுமைபற்றி அரையென்றார் என்றார். |
2. சார்பெழுத்து மூன்றென்பவர்க் கிது கூறல்வேண்டாவாகலின் பிறன்கோட் கூறல் என்னும் உத்தி என்றார். |