நூன்மரபு55

தென்னங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி.மெல்லென்றிசைத்தலானும்
மெல்லென்று மூக்கின் வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தாயிற்று.
 

21.

இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்; ய ர ல வ ழ ள  -  ய ர ல வ ழ ள என்னுந் தனி
மெய்களை, இடையெழுத்தென்ப -இடையெழுத் தென்னுங் குறியினையுடைய
என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

இதுவும்  ஆட்சியுங்  காரணமும்  நோக்கிய  குறி.  இடை  நிகர்த்தாய்
ஒலித்தலானும்     இடைநிகர்த்தாய     மிடற்றுவளியாற்    பிறத்தலானும்
இடையெழுத்தாயிற்று.
 

வல்லினத்துக்   க-ச-த-ப   என்னும்   நான்கும் மெல்லினத்து ஞ-ந-ம
என்னும்   மூன்றும்   இடையினத்து   ய-வ என்னும் இரண்டும் மொழிக்கு
முதலாதல்   மொழிக்கு   முதலாதல்   நோக்கி   இம்முறையே வைத்தார்.
1இப்பெயரானே எழுத்தென்னும் ஓசைகள் உருவாயின.  உயிர்க்குங் குறுமை
நெடுமை  கூறலின்  அவையும்  உருவாயின. இது சார்பிற் றோற்றத்திற்கும்
ஒக்கும்.
 

(21)
 

22.

2அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை.
 
 

இது  தனிமெய் பிறமெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்கும் மயக்கமும்
உயிர்மெய்   உயிர்மெய்யோடுந்   தனிமெய்யோடும்  மயங்கும் மயக்கமும்
கூறுகின்றது.


1. இப்பெயரானே  என்றது,  வன்மை  மென்மை  இடைமை  என்னும்
பெயர்களை.   உரைகாரர்   தாம்   எழுத்து  அருவன்று  உருவென்பதை
இதனாலும் வலியுறுத்துமாறு உருவாயின என ஈண்டுங் கூறினாரென்க.
 

2. இச்  சூத்திரத்துக்கு   உரையாசிரியர்   மேற்சொல்லிய  பதினெட்டு
மெய்யும் தம்மை மொழிப்படுத்தி வழங்குதலுளதாமிடத்து