நூன்மரபு59

ப றக்கள்,   ஒத்தன   நிலையே -   பின்னிற்றற்குப்  பொருந்தின மயங்கி
நிற்றற்கண் என்றவாறு.
 

உதாரணம் : கங்கன்  கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன்  மன்றன் என
வரும்.  தெங்கு  பிஞ்சு  வண்டு  பந்து  கம்பு  கன்று எனக் குற்றுகரமுங்
காட்டுப. 
 

(25)
 

26.

அவற்றுள், ணனஃகான் முன்னர்க்
க ச ஞ ப ம ய வவ் வேழு முரிய.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : அவற்றுள் - மேற்கூறிய   மெல்லொற்று  ஆறனுள்,
ணனஃகான் முன்னர் - ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ
ஏழும்   உரிய  -  டறக்களே   யன்றிக்  க ச ஞ ப ம ய வ   என்னும்
ஏழெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய என்றவாறு.
 

உதாரணம் : 1எண்கு  வெண்சாந்து  வெண்ஞாண்  பண்பு  வெண்மை
மண்யாறு எண்வட்டு எனவும், புன்கு புன்செய் மென்ஞாண் அன்பு வன்மை
இன்யாழ்  புன்வரகு  எனவும்  வரும். எண்வட்டு  வினைத்தொகை. எண்கு
புன்கு பெயர். 
 

(26)
 

27.

ஞ ந ம வ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஞ ந ம வ  என்னும் புள்ளி முன்னர் - ஞ ந ம வ
என்று கூறப்படும்  புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே
- யஃகான் நிற்றல் பொருண்மை பெற்றது என்றவாறு.
 

இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ்செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக
வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன.


1. எண்கு - கரடி. ஞாண் - கயிறு. எண்வட்டு என்பதற்கு எண்ணப்படும்
வட்டு எனப் பொருள் கொள்க.