62நூன்மரபு

இதன் பொருள் : மெய்ந்நிலை   சுட்டின்  -   பொருணிலைமையைக்
கருதின், எல்லா எழுத்தும் - பதினெட்டு மெய்யும், தம்முன் தாம் வரூஉம் -
தம்முன்னே   தாம்   வந்து   மயங்கும்,  ர  ழ  அலங் கடையே - ரகார
ழகாரங்களல்லாத இடத்து என்றவாறு.
 

உதாரணம் : காக்கை  எங்ஙனம்  பச்சை  மஞ்ஞை பட்டை மண்ணை
தத்தை  வெந்நெய்  அப்பு அம்மை வெய்யர் எல்லி எவ்வி கள்ளி கொற்றி
கன்னி என வரும்.
 

மெய்ந்நிலை  சுட்டி  னென்றதனால்  தனிமெய்  முன்னர்  உயிர் மெய்
வருமென்று  கொள்க.  எல்லாமென்றது ரகார ழகாரங்கள் ஒழிந்தனவற்றைத்
தழுவிற்று.
 

(30)
 

31.

அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு.
 

இது   குற்றெழுத்  தென்றவற்றுட்   சிலவற்றிற்கு  வேறோர்   குறியீடு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : அ இ உ  அம்மூன்றுஞ்  சுட்டு - அ இ உ என்று
கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினையுடைய என்றவாறு.
 

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி, சுட்டி அறியப்படும்
பொருளை   உணர்த்தலின்.  தன்னின   முடித்தல்   என்பதனான் எகரம்
வினாப்பொருள் உணர்த்தலுங் கொள்க.
 

உதாரணம் : அக்கொற்றன்  இக்கொற்றன்  உக்கொற்றன்  எப்பொருள்
என வரும். இவை  பெயரைச்  சார்ந்து  தத்தங்  குறிப்பிற் பொருள்செய்த
இடைச்சொல்.  இச்சூத்திரம் 1ஒரு  தலைமொழித லென்னும் உத்தி. இதுவும்
மேலைச்   சூத்திரமும்   எழுத்தாந்தன்மையன்றி   மொழிநிலைமைப்பட்டு
வேறோர் குறி பெற்று நிற்றலின் மொழிமரபினைச் சேரவைத்தார்.
 

(31)

1. ஒருதலைமொழித    லென்னு    முத்தியாவது   -   ஓரதிகாரத்திற்
சொல்லற்பாலதனை
  வேறோரதிகாரத்திற்   சொல்லி    அவ்விலக்கணமே
ஆண்டும்  பெறவைத்தல்.  சொல்லதிகாரத்திற்  சொல்லற்பாலதாய சுட்டை
எழுத்திற் கூறி அதனையே சொல்லிற்கும் பெறவைத்தல்.