37. | இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. |
|
இது குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகிவரு மென்கின்றது. |
இதன் பொருள் : இடைப்படிற் குறுகும் இடனுமார் உண்டே - அவ்வுகரம் ஒருமொழியுளன்றிப் புணர்மொழியிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறுகும் இடனும் உண்டு, கடப்பாடு அறிந்த புணரியலான - அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப் பெறுவதெனின், அதன் புணர்ச்சி முறைமை அறியுங் குற்றியலுகரப் புணரியலுள் என்றவாறு. |
'வல்லொற்றுத் தொடர்மொழி' (எழு - 409) என்பதனுள் வல்லெழுத்துத் தொடர்மொழியும் வல்லெழுத்து வரும் வழியும் இடம் ; ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு. |
உதாரணம் : செக்குக்கணை சுக்குக்கோடு எனவரும். இவை அரைமாத்திரையிற் குறுகியவாறு ஏனையவற்றோடு படுத்து உணர்க. இடனுமெனவே இது சிறுபான்மையாயிற்று. |
(4) |
38. | குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. |
|
இது நிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஆய்தப்புள்ளி - ஆய்தமாகிய ஒற்று, குறியதன் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து - குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடுகூடிய வல்லெழுத்தாறின் மேலிடத்ததாய் வரும் என்றவாறு. |
1வல்லா றன்மிசைத் தென்றதனானும் ஈண்டுப் புள்ளியென்றதனானும் 'ஆய்தத் தொடர்மொழி' (எழு - 406) என மேற்கூறுதலானும் உயிரென்றது ஈண்டுப் பெரும்பான்மை |
|
1. வல்லாறன்மிசைத் தென்றதனானும் ஈண்டுப் புள்ளி என்றதனானும், ஆய்தத் தொடர்மொழியென மேற்கூறுதலானும், உயிர் என்றது ஈண்டுப் பெரும்பான்மையும் குற்றுகரமேயா மென்றதன் விளக்கமாவது :- முன் குற்றயலுகர விலக்கணங் கூறுமிடத்து உக |