சிறப்புப்பாயிரம்7

இனிச் சிறப்புப்பாயிரத் திலக்கணஞ் செப்புமாறு :
 

'பாயிரத் திலக்கணம் பகருங் காலை
நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி
யாசிரிய மானும் வெண்பா வானு
மருவிய வகையா னுவறல் வேண்டும்.'

 

இதனான் அறிக.
 

நூல்செய்தான் பாயிரஞ் செய்தானாயிற் றன்னைப் புகழ்ந்தானாம்.
 

'தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந்
தான்றற் புகழ்த றகுதி யன்றே.'

 

என்பவாகலின்.
 

பாயிரஞ்செய்வார்   தன்ஆசிரியருந்  தன்னோடு    ஒருங்கு     கற்ற
ஒருசாலைமாணக்கருந்    தன்   மாணாக்கருமென  இவர்.  அவருள்  இந்
நூற்குப்   பாயிரஞ்    செய்தார்   தமக்கு   ஒருசாலை   மாணாக்கராகிய
பனம்பாரனார்.
 

இதன் பொருள் : வடவேங்கடந் தென்குமரி ஆயிடை - வடக்கின்கண்
வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமாகிய அவ்விரண் டெல்லைக்குள்ளிருந்து,
தமிழ்  கூறும்  நல்  உலகத்து  வழக்குஞ் செய்யுளும் ஆ இரு முதலின் -
தமிழைச்     சொல்லும்   நல்லாசிரியரது   1வழக்குஞ்    செய்யுளுமாகிய
அவ்விரண்டையும்   அடியாகக்  கொள்ளுகையினாலே, செந்தமிழ் இயற்கை
சிவணிய   நிலத்தொடு   முந்துநூல்  கண்டு  -  அவர் கூறுஞ் செந்தமிழ்
இயல்பாகப்    பொருந்திய  செந்தமிழ்நாட்டிற்கு  இயைந்த  வழக்கோடே 
முன்னையிலக்கணங்கள்   இயைந்தபடியை    முற்றக்கண்டு,    முறைப்பட
எண்ணி    -   அவ்விலக்கணங்களெல்லாஞ்   சில்வாழ்நாட்   பல்பிணிச்
சிற்றறிவினோர்க்கு   அறியலாகாமையின்  யான்  இத்துணை  வரையறுத்து
உணர்த்துவலென்று  அந்நூல்களிற்  கிடந்தவாறன்றி  அதிகார  முறையான்
முறைமைப்படச் செய்தலை எண்ணி, எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி
- அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினையும்
ஆராய்ந்து,   போக்கு   அறுபனுவல்   -  பத்துவகைக்  குற்றமுந் தீர்ந்து
முப்பத்திரண்டு வகை 


1.சிவஞானமுனிவர்,  'வழக்கினையுஞ்   செய்யுளினையும்   ஆராய்ந்த
பெரிய    காரணத்தானே'     என    உரைகூறி    'நச்சினார்க்கினியார்
முதலென்பதனைப்           பெயரடியாற்பிறந்த      முதனிலைவினைப் பெயராகக்கொண்டு   முதலுதவினாலென   உரைப்பர் ;  இருமுதலென்னும்
தொகைச்சொல்   அங்ஙனம்  பக்கிசைத்தல்  பொருந்தாமை  அறிக' எனத்
தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கூறியது காண்க.