72மொழிமரபு

அதிகாரப்பட்டமை கண்டு, 'எஃஃகிலங்கிய  கையரா யின்னுயிர் - வெஃஃகு
வார்க்கில்லை வீடு'  என்று  ஏனையிடத்தும்  வந்தன. ஒற்றளபெடுக்குமாறு
இவ்  வதிகாரத்துக்  கூறிற்றிலர்,  அஃது  உயிரளபெடைபோலச்  சீர்நிலை
யெய்துதலும்    அசைநிலையாந்தன்மையு    முடையவாய்ச்   செய்யுட்கே
வருதலின்.  இதனானே  ஒற்றளபெடையும்  ஒரு மாத்திரை பெறுமென்பது
பெற்றாம்.
 

எழுத்தினென்றே     இன்     உவமப்பொருள்.      இயலாவென்றது
செய்யாவென்னும் வினையெச்சம்.
 

இவ்வாறன்றி    இக்    குறிப்புச்    சொற்கள்  ஆய்தம்  இரண்டிட்டு
எழுதப்படாவென்று   பொருள்   கூறிற்    செய்யுளியலோடு   மாறுபட்டு
மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று உணர்க.
 

(7)
 

41.

குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற்றெழுத்தே.
 

இஃது  எதிரது  போற்றலென்னும்  உத்திபற்றிச்  செய்யுளியலைநோக்கி
'நீட்டம்   வேண்டின்'   (எழு - 6)   என  முற்கூறிய அளபெடையாமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : குன்றிசை  மொழிவயின் நின்று இசை நிறைக்கும் -
அளபெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான ஓசையையுடைய அவ் வளபெடைச்
சொற்கண்ணே   நின்று  அவ்வோசையை   நிறைக்கும்,  அவை  யாவை
யெனின் ? நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்தே - நெட்டெழுத்துக்களின்
பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் என்றவாறு.
 

உதாரணம் : ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ  எனவரும்  குன்றிசை மொழி
என்றதற்கு  இசைகுன்றுமொழி  என்றுமாம்.  இன  மொத்தலாவது பிறப்பும்
புணர்ச்சியும்   ஓசையும்   வடிவும்   ஒத்தல்.    ஈண்டு   மொழியென்றது
'அளபெடையசைநிலை' (செய்யுளியல் - 17) என்னுஞ் செய்யுளிற் சூத்திரத்து
எட்டு  இயற்சீரின்  பாற்படுகின்ற  எண்வகை அளபெடைச் சொற்களையும்,
அவை ஆஅ கடாஅ ஆஅழி படாஅகை ஆஅங்கு ஆஅவது