மொழிமரபு77

மொழியாமென்று   கூறி,   மீட்டும்    அதனையே   இச்   சூத்திரத்தான்
ஓரெழுத்தொருமொழி    யென்றெடுத்து   அதனோடே    ஈரெழுத்தையும்
இரண்டிறந்ததனையுங்  கூட்டி  மொழியாகக்  கோடலின், ஒற்றினைக் கூட்டி
எழுத்தாகக்  கோடல்  ஆசிரியர்க்குக்  கருத்தன்மை  யுணர்க.  அன்றியும்
'மொழிப்படுத்  திசைப்பினும்'   (எழு  -  53)   என்னுஞ்    சூத்திரத்திற்
கூறுகின்றவாற்றானும்  உணர்க. 'அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதென்ப'
(எழு - 1)  என  ஒற்றினையும்  எழுத்தென்றது  எழுத்தின்தன்மை கூறிற்று.
ஈண்டு மொழியாந்தன்மை கூறிற்று.
 

(12)
 

46. 

மெய்யி னியக்க மகரமொடு சிவணும்.
 

இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: மெய்யினியக்கம்   -    தனிமெய்களினது   நடப்பு,
அகரமொடு சிவணும் - அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.
 

எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொருளாகிய உருவாக
இயக்கும்  இயக்கமும், கையாற்  காட்சிப்  பொருளாகியவடிவாக  இயக்கும்
இயக்கமும், அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.
 

உதாரணம்: 'வல்லெழுத்  தென்ப க ச ட த ப ற'  (எழு - 19)  'ககார
ஙகார   முதனா   வண்ணம்'   (எழு  -  9)  என்றாற்போல்வன  நாவால்
இயக்கியவாறு   காண்க.   எழுதிக்   காட்டுமிடத்துக்   ககரம்  முதலியன
உயிர்பெற்று  நின்ற  வடிவாக  எழுதிப்  பின்னர்த்  தனிமெய்யாக்குதற்குப்
புள்ளியிட்டுக்  காட்டுகின்றவாற்றான்,  வடிவை   இயக்குமிடத்தும்  அகரம்
கலந்து நின்றவாறு காண்க.
 

இங்ஙனம்  மெய்க்கண்   அகரங்  கலந்துநிற்குமாறு   கூறினாற்போலப்
பதினோருயிர்க்கண்ணும்   அகரங்   கலந்து   நிற்குமென்பது   ஆசிரியர்
கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு
உணர்த்துதல்      அரிதாகலானுமென்று        உணர்க.      இறைவன்
இயங்குதிணைக்கண்ணும்   நிலைத்திணைக்கண்ணும்   பிறவற்றின்கண்ணும்
அவற்றின்