78மொழிமரபு

தன்மையாய்  நிற்குமாறு  எல்லார்க்கும்  ஒப்ப  முடிந்தாற்போல அகரமும்
உயிர்க்கண்ணுந்   தனிமெய்க்கண்ணுங்  கலந்து  அவற்றின்  தன்மையாயே
நிற்குமென்பது  சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. 'அகரமுதல' என்னுங்
குறளான்,  அகரமாகிய  முதலையுடைய  எழுத்துக்களெல்லாம்;  அதுபோல
இறைவனாகிய  முதலையுடைத்து  உலகமென  வள்ளுவனார் உவமைகூறிய
வாற்றானுங்,  கண்ணன்  எழுத்துக்களில்  அகரமாகின்றேன்  யானேயெனக்
கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க.
 

இதனான்  உண்மைத்தன்மையுஞ்   சிறிது   கூறினாராயிற்று.   இதனை
நூன்மரபிற்   கூறாது  ஈண்டுக்  கூறினார்:  'வல்லெழுத் தென்ப க ச ட த
ப ற'  (எழு - 19)  என்ற  இடத்துத்  தான்  இடைநின்று  ஒற்றென்பதோர்
பொருளைஉணர்த்தி மொழியாந்தன்மை எய்திநிற்றலின்.
 

(13)
 

47.

தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து
மெய்ந்நிலை மயக்க மான மில்லை.
 

1இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண்
ஏறி   உயிர்மெய்யாய்   நின்றகாலத்து   அம்மெய்யாற்   பெயர்பெறுமாறு
கூறுகின்றது. 


1.நச்சினார்க்கினியர்  இச்  சூத்திரத்திற்கு  இது  உயிர்மெய்க் கண் ஏறி
உயிர்மெய்யாய் நின்றவிடத்து அம்மெய்யாற் பெயர்பெறுமாறு கூறுகிறதென்று
கருத்துரைத்துப், பின்  பன்னீருயிரும்  மெய்யின்  றன்மையிலே தம்முடைய
தன்மை  மயங்கிற்றாகப் பெயர்கூறிற் குற்றமில்லை என்று பதவுரையுங் கூறி,
மெய்யின்  தன்மையாவது, மெய்யோடு  கூடிய  உயிரும் வன்மை மென்மை
இடைமை  என்று  பெயர்பெறுதலென்று  விரிவுரையுங்  கூறி, மூவினத்தாற்
பெயர்  பெறுமாற்றிற்  குதாரணமுங் காட்டினர். ஆயின் இங்ஙனம் வலிந்து
மாற்றிப்  பொருள்  கோடலாற்  போந்த  பயனின்மையின்,  உரையாசிரியர்
கூறியவாறு     இடைநிலை    மயக்கப்    புறனடையாகக்கொண்டு,   தம்
வடிவினியல்பைச்   சொல்லுமிடத்து   எல்லா    மெய்யெழுத்தும்  மெய்ம்
மயக்கநிலையில்  மயங்கல்  குற்றமில்லையென்று  கோடலே பொருத்தமாம்,
நன்னூலாரும்  இவ்வாறே 
'தம்பெயர் ...... இயலுமென்ப'   எனக்  கூறுதல்
காண்க.  அன்றியும்  வல்லெழுத்  தியையி னவ்வெழுத்து மிகுவே என்றது,
மெய்யெழுத்து  முன்னும்  உயிர் பின்னுமாக ஒலித்துநின்ற முறைபற்றியன்றி,
உயிரையுங்   கூட்டியன்று.   ஆதலானும்   நச்சினார்க்கினியர்   கருத்துப்
பொருந்தா தென்க.