இதன் பொருள்: எல்லா எழுத்தும் - பன்னீருயிரும், மெய்ந்நிலை தம் இயல் மயக்கங் கிளப்பின் - மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின், 1மானமில்லை - குற்றமில்லை என்றவாறு. |
மெய்யின் தன்மையாவது வன்மை மென்மை இடைமை. தம்மியலாவது உயிர்த்தன்மை என்றது. வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்தென உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று. அவை 'வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே' (எழு - 296) எனவும், 'மெல்லெழுத் தியையி னிறுதியொ டுறழும்' (எழு - 342) எனவும், 'இடையெழுத்தென்ப ய ர ல வ ழ ள' (எழு - 21) எனவும் பிறாண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை இடைமையென விசேடித்த சிறப்பான் இப்பெயர் கூறினார். |
இஃதன்றிப் பதினெட்டுமெய்யின் தன்மை கூறுமிடத்து மெய்ம்மயக்கங் கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்கு மென்று கூறி, 'அவற்றுள் லளஃகான் முன்னர்' (எழு - 24) என்பதனைக் காட்டில் அஃது இருமொழிக்கண்ணதென மறுக்க. |
(14) |
48. | ய ர ழ வென்னு மூன்று மொற்றக் க ச த ப ங ஞ ந ம வீரொற் றாகும். |
|
இஃது ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: ய ர ழ என்னும் மூன்றும் ஒற்ற - ய ர ழ வென்று கூறப்படும் மூன்று புள்ளியும் ஒன்றாய் நிற்ப, க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகும் - க ச த பக்களும் ங ஞ ந மக்களும் வந்து ஈரொற்றாய்நிற்கும் என்றவாறு. |
உதாரணம்: வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும் பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்ங்கனி தேய்ஞ்சது காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், நேர்ங்கல் நேர்ஞ்சிலை |
|
1. ஆனம் என்று பிரிப்பது நலம், ஆனம் - குற்றம். ஹாநம் என்னும் வடசொற்றிரிபு. |