8சிறப்புப்பாயிரம்

உத்தியொடு   புணர்ந்த  இந்நூலுள்ளே,  மயங்கா  மரபின்  எழுத்துமுறை
காட்டிப்    புலந்தொகுத்தோனே  -   அம்மூவகையிலக்கணமும்  மயங்கா
முறைமையாற்     செய்கின்றமையின்   எழுத்திலக்கணத்தை    முன்னர்க்
காட்டிப்   பின்னர்   ஏனை   யிலக்கணங்களையுந் தொகுத்துக் கூறினான்,
நிலந்தரு   திருவிற்   பாண்டியன்   அவையத்து  - மாற்றாரது நிலத்தைக்
கொள்ளும்  போர்த்  திருவினையுடைய  பாண்டியன் மாகீர்த்தி அவையின்
கண்ணே,  அறங்கரை  நாவின்  நான்மறை  முற்றிய  அதங்கோட்டாசாற்கு
அரில்   தபத்    தெரிந்து  -  அறமேகூறும்   நாவினையுடைய   நான்கு
வேதத்தினையும் முற்ற அறிந்த அதங்கோடென்கிற  ஊரின் ஆசிரியனுக்குக்
குற்றமற    ஆராய்ந்து    கூறி,   மல்குநீர்வரைப்பின்   ஐந்திரம்நிறைந்த
தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி - கடல் சூழ்ந்த  உலகின்கண்ணே
ஐந்திரவியாகரணத்தை    நிறைய     அறிந்த     பழைய     காப்பியக்
குடியினுள்ளோனெனத்  தன்பெயரை மாயாமல்  நிறுத்தி,  பல்புகழ்  நிறுத்த
படிமை  யோனே  - பல  புகழ்களையும்  இவ்வுலகின் கண்ணே  மாயாமல்
நிறுத்திய தவவேடத்தையுடையோன் ; என்றவாறு.
 

இருந்து  தமிழைச்  சொல்லும் என்க; கொள்ளுகையினாலே பொருந்திய
நாடு  என்க ; கண்டு  எண்ணி  ஆராய்ந்து  தன்னூலுள்ளே தொகுத்தான்
அவன்  யாரெனின்  அவையின்கண்ணே  கூறி  உலகின்  கண்ணே  தன்
பெயரை நிறுத்திப் புகழை நிறுத்திய படிமையோன் என்க.
 

இப்பாயிரமுஞ் செய்யுளாதலின் இங்ஙனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினார்.
இதற்கு    இங்ஙனங்   கண்ணழித்தல்   1உரையாசிரியர்   கருத்தென்பது
அவருரையான் உணர்க.
 

இனி  மங்கலமரபிற்  காரியஞ்செய்வார் வடக்குங் கிழக்கும் நோக்கியுஞ்
சிந்தித்தும்  நற்கருமங்கள்  செய்வாராதலின்  மங்கலமாகிய   வடதிசையை
முற்கூறினார்,   இந்நூல்   நின்று  நிலவுதல்  வேண்டி.  தென்புலத்தார்க்கு
வேண்டுவன  செய்வார்   தெற்கும்   மேற்கும்   நோக்கியுங்   கருமங்கள்
செய்வாராதலின்     தென்றிசையைப்     பிற்கூறினார்.      நிலங்கிடந்த
நெடுமுடியண்ணலை   நோக்கி   உலகந்   தவஞ்செய்து   வீடு    பெற்ற
மலையாதலானும்   எல்லாரானும்    அறியப்படுதலானும்    வேங்கடத்தை
எல்லையாகக் கூறினார். குமரியுந் தீர்த்தமாகலின்  எல்லையாகக்  கூறினார்.
இவ்விரண்டினையுங் காலையே ஓதுவார்க்கு நல்வினை


1. உரையாசிரியரென்றது தொல்காப்பியத்திற்கு  முதன்முதல் உரைசெய்த
இளம்பூரண அடிகள். அன்றி, வேறொருவர் என்பாருமுளர். அதுவே எமது
கருத்தும்.