றால், அது முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில் கூற்றாமென்க. |
(20) |
54. | அகர இகர மைகார மாகும். |
|
இது சிலவெழுத்துக்கள் கூடிச் சிலவெழுத்துக்கள்போல இசைக்குமென எழுத்துப்போலி கூறுகின்றது. |
இதன்பொருள் : அகர இகரம் ஐகாரம் ஆகும் - அகரமும் இகரமுங் கூட்டிச்சொல்ல ஐகாரம்போல இசைக்கும், அது 1கொள்ளற்க என்றவாறு. |
போல என்றது தொக்கது. |
உதாரணம் : ஐவனம் அஇவனம் எனவரும். ஆகுமென்றதனால் இஃது இலக்கணமன்றாயிற்று. |
(21) |
55. | அகர உகர மௌகார மாகும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : அகர உகரம் ஒளகாரம் ஆகும் - அகரமும் உகரமும் கூட்டிச்சொல்ல ஒளகாரம்போல இசைக்கும், அது கொள்ளற்க என்றவாறு. |
போல என்றது தொக்குநின்றது. |
உதாரணம் : ஒளவை அஉவை எனவரும். |
(22) |
56. | அகரத் திம்பர் யகரப் புள்ளியு மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : அகரத்திம்பர் யகரப்புள்ளியும் - அகரத்தின்பின் இகரமேயன்றி யகரமாகிய புள்ளிவந்தாலும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் - ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவுபெறத் தோன்றும் என்றவாறு. |
|
1. கொள்ளற்க என்றது பொருந்தாது, இது அக்காலத்துக் கொள்ளப்பட்டு வழங்கி வந்தமையின். இதனை நன்னூல் விருத்தியுரைகாரர் சந்தியக்கரமென்றல் பொருந்தாது. இதனை யாம் 'செந்தமி' ழில் வெளிப்படுத்திய 'போலி எழுத்து' என்னும் கட்டுரையை நோக்கித் தெளிக. |