இதன் பொருள் : 1இகரயகரம் இறுதிவிரவும் - இகரமும் யகரமும் ஒருமொழியின் இறுதிக்கண் ஓசை விரவிவரும், அவ்விகாரங் கொள்ளற்க என்றவாறு. |
நாய் நாஇ எனவரும். |
(25) |
59. | பன்னீ ருயிரு மொழிமுத லாகும். |
|
இது மேல் எழுத்தினான் மொழியாமாறு உணர்த்தி அம் மொழிக்கு முதலாமெழுத்து இவையென்பது உணர்த்துகின்றது. |
இதன் பொருள் : பன்னீருயிரும் - பன்னிரண்டு உயிரெழுத்தும், மொழிமுதல் ஆகும் - மொழிக்கு முதலாம் என்றவாறு. |
உதாரணம் : அடை ஆடை இலை ஈயம் உளை ஊர்தி எழு ஏணி ஐவனம் ஒளி ஓடம் ஒளவியம் எனவரும். |
(26) |
60. | உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. |
|
இஃது உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது. |
இதன் பொருள் : உயிர்மெய் யல்லன மொழிமுதல் ஆகா - உயிரோடுகூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா என்றவாறு. |
எனவே, உயிரோடுகூடிய மெய்களே மொழிக்கு முதலாவன என்றவாறாம். 2ஈண்டு உயிர்மெய்யென்றது வேற்றுமை நயங் கருதிற்று. ஒற்றுமைநயங் கருதின் மேலைச் சூத்திரத்து உயிரோடுங்கூடி ஆமென்றல் பயனின்றாம். |
(27) |
61. | கதந பமவெனு மாவைந் தெழுத்து மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. |
|
இது மேற்பொதுவகையான் எய்துவித்த இருநூற்றொரு பத்தாறு எழுத்துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்துவிக்கின்றது. |
|
1. இகர யகரம் இறுதி விரவி நடந்த மொழி வழக்கு அக்காலத் துண்டென்பது இதனா லயறிப்படும். |
2. உயிர்மெய் என்றது, உயிரோடுகூடிய மெய்யை, அது வருஞ் சூத்திரத்து, 'உயிரொடுஞ் செல்லும்' என்றதனாலு மறியப்படும். |