98மொழிமரபு

78.

ஞணநம னயரல வழள வென்னு
மப்பதி னொன்றே புள்ளி யிறுதி.

 

இது  முன்னர்  உயிர்  ஈறாமாறு  உணர்த்திப்  புள்ளிகளுள்  ஈறாவன
இவையென்கின்றது.
 

இதன் பொருள்: ஞணநமனயரலவழள   என்னும்  அப்பதினொன்றே
புள்ளியிறுதி - ஞணநமனயரலவழள வென்று  கூறப்பட்ட  பதினொன்றுமே
புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன என்றவாறு.
 

உதாரணம் : உரிஞ் மண் பொருந்  திரும்  பொன்  வேய் வேர் வேல்
தெவ்  வீழ்   வேள்  எனவரும்.   னகரம்  ஈற்று  வையாது  மகரத்தோடு
வைத்தது வழக்குப் பயிற்சியும் மயக்க இயைபும் நோக்கி.
 

(45)
 

79.

உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்.
 

இது  மேற்   பொதுவகையான்   ஈறாவனவற்றுள்   வரையறைப்படுவது
இதுவென்கின்றது.
 

இதன் பொருள்: உச்சகாரமொடு  நகாரஞ்  சிவணும் - உகாரத்தோடு
கூடிய     சகரம்       இருமொழிக்கீறாயவாறுபோல      நகரவொற்றும்
இறுமொழிக்கல்லது ஈறாகாது என்றவாறு.
 

உதாரணம் : பொருந் வெரிந் எனவரும்.
 

(46)
 

80.

உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
யப்பொரு ளிரட்டா திவணை யான.

 

இதுவும் அது.
 

இதன் பொருள்: உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே - உகாரத்தோடு
கூடிய பகரத்தோடு ஞகரமும் ஒத்து  ஒருமொழிக்கு  ஈறாம்,  இவணையான
அப்பொருள்   இரட்டாது  -   இவ்விடத்து    ஞகாரத்தின்   கண்ணான
அப்பொருள் பகரம் போல இருபொருட்படாது என்றவாறு.
 

உதாரணம் : உரிஞ்  எனவரும்.  ஞகாரம்   ஒருமொழிக்கு  ஈறாதலின்
நகரத்தின்பின் கூறினார். இவணை என்னும் ஐகாரம் அசை.
 

(47)