என்றது; அதுவென்னும் சொல், சாத்தனதுகொண்டான் என வினையொடு புணர்ந்து நின்ற வழியும் எமது, தமது எனப் பெயரொடு புணராமல் தனித்து இறுதியாய் நின்றவழியும் உருபாகாது என்றவாறு. என்னை? சாத்தன் அது கொண்டான் என்னுமிடத்து அது என்பது சுட்டுப்பெயராயும், சாத்தனது கொண்டான் என நிற்பின் குறிப்பு வினைப்பெயராயும் எமது, தமது என்னுமிடத்துக் குறிப்புவினை முற்றாயும் நிற்றலின் வேற்றுமை யுருபாகாதென்க. |