வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி
மேற்கூ றியற்கை ஆவயி னான
மேற்கூறிய அவ்இரண்டு ஈறுகளும் வேற்றுமைக்கண் இயல்புகணங்களொடு புணரும் இலக்கணம் கூறுகின்றது.
பொருள்: மேற்கூறிய அவ்விரு ஈறுகளும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும், வருமொழி வன்கணமல்லாதவழி மேற்கூறியஇயல்பினவாம். வல்லெழுத்தாயின் திரியும் என்பது புள்ளிமயங்கியளுள்கூறப்படும்.
எ-டு: மண், பொன் என நிறுத்தி - ஞெகிழ்ச்சி, நீட்சி, மாட்சி, யாப்பு,வன்மை எனவும், அழகு, ஆக்கம், இயல்பு, ஈட்டம், உயர்ச்சி, ஊட்டம்,எழுச்சி, ஏற்றம், ஐது, ஒடுக்கம், ஓக்கம் எனக்கூட்டி இயல்பாமாறு கண்டுகொள்க.