சூ. 20 :மெல்லெழுத் தென்ப ஙஞண நமன

(20)
 

க-து:

இதுவுமது
 

பொருள்:ஙஞணநமன  என்னும் இவ்வாறனையும் மெல்லெழுத்து எனக்
கூறுவர் புலவர்.
 

இவை ஆறும் மேற்கூறிய வல்லெழுத்துப் பிறக்குமிடத்தே பிறந்து நிற்க,
மூக்கின்   வளியிசை  அவற்றை   வெளிப்படுத்தலின்  அவ்வளியிசையின்
மென்மை, எழுத்தின்   மேலேற்றிக்    கூறப்பட்டது. இவற்றை மென்கணம்
என்பர்.