|
சூ. 225 : | வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே | (23) | க - து: | ஆகார ஈற்றுப்பெயர் வேற்றுமைவழிப் புணருமாறு கூறுகின்றது. | பொருள்: ஆகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் அல்வழிப் புணர்ச்சியொடு ஒத்த தன்மைத்தேயாம். அஃதாவது; கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்றவாறு. | எ. டு: தாராக்கால்; மூங்காக்கால், செவி, தலை, புறம் எனவரும். (தாரா-ஒருபறவை; மூங்கா-கீரிப்பிள்ளை) |
|