க-து:
பொருள் : வெயில் என்னும் பெயர், மழை என்னும் சொற்கு ஓதியஇயல்பிற்றாய் அத்தும் இன்னுமாகிய சாரியை பெற்றுப் புணரும்.
எ - டு: வெயிலத்துக் கொண்டான்; வெயிலிற் கொண்டான், சென்றான்,தந்தான், போயினான், ஞான்றான், நின்றான், மீண்டான், வந்தான்எனவரும்.
அத்துச் சாரியையும் இன் சாரியையும் ஒருங்கு மாட்டேற்றிக்கூறினமையான் ‘‘அத்தே வற்றே’’ என்னும் சூத்திரத்தாற் கூறிய நிலைமொழிஒற்றுக்கேடு இதற்கு எய்தாதாயிற்று. ‘இருள்’ என்னும் கிளவிக்கும்இவ்விளக்கம் ஒக்கும்.