சூ. 379 :வேற்றுமை அல்வழி ஆய்த மாகும் 
(84)
 

க-து:

சுட்டுப் பெயரின் வகரம் அல்வழியாற் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்  :  சுட்டுப்    பெயரின்     வகர    ஈறு   அல்வழிக்கண்
வல்லெழுத்தொடு புணருமிடத்து வகரந்திரிந்து ஆய்தப் புள்ளியாய் நிற்கும்.
 

எ - டு:  அஃகடிய, இஃகடிய, உஃகடிய- சிறிய, தீய, பெரிய எனவரும்.
புணர்மொழி ஆய்தம் என்பது தவறான  கொள்கை   என்பது  இதனானும்
விளங்கும்.