சூ. 420 :வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்(15)
 

க-து:

மென்றொடர்மொழியுள் இரண்டற்கு வேறு சாரியை ஓதுகின்றது.
 

பொருள்: வண்டு-பெண்டு என்னும்    சொற்கள்   இன்சாரியையொடு
பொருந்திவரும்.
 

எ-டு:  வண்டின்கால், பெண்டின்கால் -   சிறை,  செவி,  தலை,  புறம்
எனவரும். ஏனைக்கணங்களுள் ஏற்பன கூட்டிக் கொள்க.