சூ. 5 :மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே
(5)
 

க - து:

மாத்திரைபற்றி எழுத்துக்கட்குப் புறனடை கூறுகின்றது.
 

பொருள்:எழுத்துக்களுள்   எந்த ஒரு எழுத்தும் விகார வகையானன்றி
இயல்பாக   மூன்றுமாத்திரையளவிற்றாய்   இசைத்தல் இன்று எனக்கூறுவர்
ஆசிரியர்.
 

எழுத்தும் என்னும் முற்றும்மை விகாரத்தான் தொக்கது. விகாரவகையான
இசைக்கும் என்பது குறிப்பெச்சம், அஃதாமாறு மேற்கூறுப.