அன்ன என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்பு மரபு கூறுகின்றது.
பொருள் :வினையுவமத்திற்கு உரிய உவமச் சொல் எட்டனுள் அன்ன என்பது வினையுவமத்திற்கேயன்றிப் பயன், மெய், உரு என்னும் பிற வகைக்கும் உவமச் சொல்லாதற்குப் பொருந்தும். இது சுட்டடியாகப் பிறந்ததாகலின் பொதுத்தன்மை எய்தி நின்றது.
எ - டு :‘மாரி யன்ன வண்கைத் தேர்வேளாய்’ (புறம்-153) எனப் பயனுவமத்திற்கும், ‘இலங்கு பிறையன்ன விலங்குவால் வையேயிறு’ என மெய் யுவமத்திற்கும் ‘செவ்வானன்ன மேனி’ என உருவுவமத்திற்கும் சிவணி வந்தவாறு கண்டுகொள்க.