செவிலியொடு மாட்டெறிந்து கூறப்பட்ட தென்க. நற்றாய் கூற்றுப் பெரும்பான்மையும் கொண்டெடுத்துக் கூறும் மொழிகளாகவே வரும். |
எ - டு : | தெறுவ தம்ம நும்மகள் விருப்பே |
| உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய் |
| பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க |
| நாடுஇடை விலங்கிய வைப்பின் |
| காடிறந் தனள்நம் காத லோளே |
| (ஐங்-313) |
| என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை |
| நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு |
| அழுங்கல் மூதூர் அலரெழச் |
| செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே |
| (ஐங்-372) |
எனவரும். பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க. |