சூ. 175 :

தாய்போற் கழறித் தழீஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப

கவவொடு மயங்கிய காலை யான

(32)
 

க - து : 

இல்லறக்     கிழமையளாகிய    தலைவிக்குரியதோ    ரியல்பு
கூறுகின்றது.
 

பொருள் :தன்னை முயங்குதலான் தலைவன் பெருமகிழ்வுறுங் காலத்து
மேல்   நின்று     மெய்கூறும்     தாயரைப்போலக்   கழற்றுரை   கூறி
இன்புறத்தழுவிக்கோடல்     ஆராய்தலையுடைய      மனைக்கிழத்திக்கும்
உரியதெனக் கூறுவர் புலவர்.
 

மனைக்கிழத்திக்கும்   என்ற   உம்மை,  காதற்  சோர்விற்   கடப்பாட்
டாண்மையின் தாய்போற் கழறுதல் (கற்-10)  காமக் கிழத்திக்கேயன்றி எனப்
பொருள் தந்து நிற்றலின் இறந்ததுதழீஇய எச்ச உம்மை.
 

தலைவனது   கடமையும்  தலைமைப்பாடும்   அவனது அயன்மைக்கும்
செயல்கட்கும் காரணமாதலை  உணர்ந்தொழுகுதலின் "ஆய்மனைக் கிழத்தி"
என்றார்.