அவையாவன பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் இரத்தலும் தெளித்தலுமாகக் கூறுமிடங்களாம். |
எ - டு : | "ஒரூஉ கொடியியல் நல்லார்" என்னும் மருதக்கலியுள் |
| ‘கடியர் தமக்கு யார்சொல்லத்தக்கார் மாற்று’ |
எனத் தலைவன் இரந்தகாலை "வினைக்கெட்டு வாயல்லா வெண்மையுரையாது கூறுநின் மாயம்மருள்வா ரகத்து" |
எனத், தான் மருளேன் என உயர்த்துக் கூறியவாறும், தலைவன் தீதன்மை தேற்றக் கண்டீபாய்தெளிக்கு எனத் தெளிவித்த காலை |
நீ கூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றுஇனி |
யார்மேல் விளியுமோ கூறு" |
எனத் தன்னைப் புகழ்ந்து எண்ணியவாறும் கண்டுகொள்க. |