சூ. 227 : | வருத்த மிகுதி சுட்டுங் காலை |
| உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் |
(31) |
க - து : | இருவகைக் கைகோளினும் தலைமக்கட்குரியதொரு பொருண்மை கூறுகின்றது. |
பொருள்: களவின்கண் கூட்டத்திற்கு இடையூறாக அமையும் இற்செறிப்புத் தலைவன் வருந்தொழிற்கருமை, அல்லகுறி முதலியவற்றானும், கற்பின்கண் பரத்தையிற்பிரிவு, உணர்த்த உணரா ஊடல் முதலியவற்றானும் எய்தும் வருத்தம் கைகடந்து போதலைக் கருதுமிடத்து உயிரொடு வாழும் வாழ்க்கையின்கண் அவலமுற்றுக் கூறும் கூற்றுத் தலைமக்கட்கு உரித்தெனக் கூறுவர் நூலோர். |
எ - டு : | தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின் |
| நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு |
| யோயின்று சொல்என் உயிர் |
(கலி-24) |
| எல்லையும் இரவும் துயில்துறந்து பல்லூழ் |
| அரும்படர் அவலநோய் செய்தான்கண் பெறல்நசைஇ |
| இருங்கழி ஓதம்போல் தடுமாறி |
| வருந்தினை அளியஎன் மடங்கெழு நெஞ்சே |
(கலி-123) |
இவை தலைவி இரங்கிக் கூறியது. |
| உரிதென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த |
| பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த |
| நெய்யுள் மெழுகின் நிலையாது பைபயத் |
| தேயும் அளித்து என்உயிர் |
(கலி-138) |
என்பது தலைவன் இரங்கிக் கூறியது. |
‘ஒன்றென முடித்தல்’ என்பதனான் தலைவியின் நிலை கருதித் தோழி இரங்கிக் கூறலும் கொள்க. |