பொருள் :பயின்றதன் மேலல்லது செல்லாத கொங்கு தேர்ந்து தாதூதுதம் வண்டும், கம்மியராற் செய்யப் பெற்றதென விளங்கும் அணிகலனும், தோளின்கண் எழுதப்பெற்றுள்ள தொய்யிற்கொடியும், செவ்விகுறைந்து திகழும் சூடியபூவும் மருட்சியைப் புலப்படுத்தும் விழியும், செய்வதறியாது புரியும் தடுமாற்றமும், மூடித்திறக்கும் இமையும், ஆராய்ச்சி இன்மையான் எழும் அச்சமும், அவைபோல்வன பிறவும் தலைவன்பால் நிகழாநின்ற ஐயத்தைக் களையும் கருவிகளாம் என்று கூறுவர் புலவர். |