10

யாப்பருங்கலக் காரிகை

 
(6) 'ககர முதல னகர விறுவாய்ப்
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப'
 
என்றார் ஆகலின்.
 
     மெய் எனினும், உடம்பெனினும், உறுப்பெனினும், புள்ளி எனினும், ஒற்றெனினும்
ஒக்கும். என்னை?
 
'மெய்யுடம் புறுப்பொற் றிவைதா மொருபொருள்
செய்யு 4மென்று செப்பினர் புலவர்.'
'மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்,'

(தொல். எழுத். சூ. 15.)
 

  'எகர ஒகரத் தியற்கையு மற்றே,'

(தொல். எழுத். சூ. 16.)
 

  'மெய்யி னியக்க மகரமொடு சிவணும்,'

(தொல். எழுத். சூ. 46.)
 

  'மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்'

(தொல். எழுத். சூ. 139.)
 

5 எனவுஞ் சொன்னார் ஆகலின்.
 
     மெய்யே; ஏகாரம்: எண்ணேகாரம். என்னை?
 
  'எண்ணே கார மிடையிட்டுக் கொளினும்
எண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர்.'

(தொல். சொல். சூ. 283.)
 


     அதற்குச் சார்.....றெழுத்துக்கு முன்னாக வல்லின வெழுத்திற்குப் பின்னாக
வருமாய்தம்' என்பது காணப்படுகிறது.

     (6) 'ககர முதல' என்ற தொடர் சில பிரதிகளில் இல்லை; தொல். எழுத். சூ. 9.
அங்ஙனமே உள்ளது. இச்சூத்திரத்திற்குப் பிரதியாகச் சில சுவடிகளில் 'ககரமுதல னகர
வீறா, மும்மையின் வந்த மூவாறு முடம்பே' என்பதும் 'ககர வொற்றுமுத
னகரவொற்றீறாப், பகருமொற் றெழுத்துப் பதினெட்டு மெய்யே' என்பதும்
காணப்படுகின்றன.
 

     (பி - ம்) 4. மென்மனார் தெரிந்திசினோரே. 5. என்றாராகலின்.