100

யாப்பருங்கலக் காரிகை

 
13 புனலாமென வனலாமெனப்
புகையா நின்றன புலிமா னேற்றை

என்றாங் கிவையிவை யியங்கலி னெந்திறத்
தினிவரல் வேண்டலந் 14தனிவரல் விலக்கலின்
இறுவரைமிசை யெறிகுறும்பிடை
இதுவென்னென வதுநோனார்
கரவிரவிடைக் களவுளமது கற்றோரது கற்பன்றே.'
 
     இது முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் அல்லாத அடியிரண்டும்
பதினாறு சீராய் இடையிடை குறைந்து வந்த ஆசிரி யத்துறை.
 

' (9) இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
அரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனில்
அரங்க மணிபொழிலா வாடுமாயின்
மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்ச மென்செய்த திளவேனில்.'
 

     இது நான்கடியா யிடையிடை குறைந்து 15இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.
 

  'கடையத னயலது கடைதபு நடையவும்
நடுவடி மடக்காய் நான்கடி யாகி
யிடையிடை குறைநவு மகவற் றுறையே'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 76.)
 
     'குறைவில் தொல் சீர் அகவல் விருத்தம் கழிநெடில் நான் கொத்து இறுவது'
எ - து. கழிநெடிலடி நான்காய்த் தம்முள்  அளவொத்து வருவன ஆசிரிய
விருத்தமெனப்படும் எ - று.
 
     ['குறைவில் தொல் சீர்' என்று சிறப்பித்தவனால் எண் சீரின் மிக்க சீரால் வருமடி
சிறப்பிலவெனக் கொள்க.]
 
  ' (10) விடஞ்சூ ழரவி னினடநுடங்க
விறல்வாள் வீசி விரையார்வேங்
 

     (9) தேன் - வண்டுகள். குயில் முழவாக, தேன் யாழாக, பொழில் அரங்கமாக
இளவேனில் ஆடும். அகன்றார் நெஞ்சம் மரமா:

      (10) மாதங்கி = மதங்கி - ஆடல் பாடல்களில் வல்ல ஒரு பெண். தாம் தாம் -
தாள ஒத்தைக் குறிக்கும் ஒலி. தண்ணுமை - ஒரு தோற்கருவி விசேடம். தண்ணுமை
தாந்தாம் என்னும்.
 

     (பி - ம்.) 13. புனலாமெனக் கன. 14. தனிவர லெனத் தலைவிலக்கலின் 15. நடுவடி
மடக்காய்.