(8) சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வைப்பு எனினும், வாரம் எனினும், போக்கியல் எனினும் ஒக்கும். |
| | 'தந்துமுன் நிற்றலிற் றரவே தாழிசை 3 ஒத்தாழ் தலினஃ தொத்தா ழிசையே தனிதர நிற்றலிற் றனிச்சொல் குனிதிரை நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலிற் சோர்ச்சியில் புலவர் சுரிதக மென்பர்' |
என்று காரணக்குறி சொன்னாரும் உளர். |
இனித் தரவு தாழிசைகட்கு அடி அளவு ஆமாறு. 'சுருங்கிற்று மூன்றடி' (கா. 42) என்னுங் காரிகையுட் போக்கிச் சொல்லுதும். |
| வரலாறு |
| | '(9) வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் 4பசப்பினவாய்ப் பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ' |
இது தரவு, |
| | 'சூருடைய 5நெடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே, 'சேணுடைய 6கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ 7நயமிலரே, 'சிலம்படைந்த வெங்கானஞ் 8சீரிலவே யென்பவாற் புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே. |
இவை மூன்றுந் தாழிசை. |
|
(8) சுரிதகம் - உள்ளடங்கும் ஓசையை யுடையது; சுரிதல் - நீர்ச் சுழி போன்று சுருங்கி முடிதல். அடக்கியல் - உள்ளடக்கி இசைக்கப்படுவது. வைப்பு : ஈற்றில் வைக்கப்படுவது. வாரம் - வரம்பாக வுடையது. போக்கியல் செல்லுதலையுடையது. (9) தகை - இயல்பு. பசப்பினவாய் - பிரிவால் ஏற்படும் நிறவேறுபாட்டை யுடையனவாய். வலிப்பவோ - துணிவார்களோ. சூர் - அச்சம், தெய்வமகளிர். கடங்கள் - பாலை நிலத்து வழிகள். பீர் - பசலை. சிலம்பு - மலை. புலம்பு - தனிமை. |
|
(பி - ம்.) 3. ஒத்தாழ்ந்திறினஃ, ஒத்தாங்கிசைத்தலி னொத்தா. 4. பசப்பினவாம், பசப்பினவால். 5. கடுங்கடங்கள். 6. வெங்கானம். 7. நல்லவரே 8. செலற்கரிய வென்பவாற். |